கல்லடிப்பாலத்தில் விளம்பரச் சுவரொட்டிகள்- பாலம் யாருக்குச் சொந்தம்

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தப் பாலம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி ஏற்பட்டு வருகிறது. 

அதாவது, உள்ளுராட்சி நிறுவனமான மாநகர சபைக்கா அல்லது வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கா என்பதுதான் இப்போதையகேள்வி.

ஏனென்றால் யாருக்கு அந்தப்பாலம் சொந்தமோ அவர்களே அதன் பராமரிப்பையும் செய்தாக வேண்டும். 

ஆனால் கல்லடிப்பாலத்தின் இரு மருங்கிலும் உள்ள பகுதிகளில் பல வியாபாரிகளாலும், தனிப்பட்ட சிலராலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால் மாவட்டத்தின் முக்கிய பாலம் அழகிழந்து கொண்டு போகிறது. 

இந்த விளம்பரங்கள் ஒட்டப்படுவதற்கு யாரிடம் இவர்கள் அனுமதி பெற்றார்கள் என்பது அடுத்த கேள்வி. இவற்றுக்கெல்லாம் யார் பதில் தருவார்கள், அல்லது இந்த விளம்பரம் ஒட்டப்படுவது எப்போது தடுக்கப்படும் என்பதே பொது மக்களின் கேள்வி!