கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று காலை தமது அமைச்சுகளில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
கல்வி அமைச்சராக கி.தண்டாயுதபாணியும் விவசாய அமைச்சராக கி.துரைராஜசிங்கமும் அவரவர் அமைச்சுகளில் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார், கலையரசன்,இராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சுகள் உத்தியோகபூர்வமாக கடமையினையேற்றவர்கள். அதனைத்தொடர்ந்து எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.
கல்வி அமைச்சராக கி.தண்டாயுதபாணியும் விவசாய அமைச்சராக கி.துரைராஜசிங்கமும் அவரவர் அமைச்சுகளில் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார், கலையரசன்,இராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சுகள் உத்தியோகபூர்வமாக கடமையினையேற்றவர்கள். அதனைத்தொடர்ந்து எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.