மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 3.30மணியளவில் ஊறணி சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று பிற்பகல் 3.30மணியளவில் ஊறணி சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.