தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக உலக நண்பர்களின் தேவைக்கான அமைப்பின் உதவி பணிப்பாளர் அ.சத்தியசீலன்,கோ. மண்முனை பிரதேச செயலக உதவி திட்ட முகாமையாளர் இராஜராட்ணம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வினை கலாபூசணம் இ.கோபாலபிள்ளை தொகுத்துவழங்கியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு மற்றும் மட்டக்களப்பு ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட பன்னிரெண்டு பாடசாலைகளில் இருந்து சுமார் 160 மாணவர்கள் இந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இவர்களில் 91மாணவர்கள் 100க்கும் மேற்பட்ட புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களாக இதன்போது சான்றிதழ்வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தினை சேர்ந்த ச.டிதுர்சியா தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்க்பபட்டதுடன் இரண்டாம் இடத்தினைப்பெற்ற அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த வே.திவேனிகா வெள்ளிப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மூன்றாம் இடத்தினைப்பெற்ற வாள்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி த.சோபினிதா வெண்கல பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.