கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமைச்சு பதவி வழங்கமுடியாது –சுசில் பிரேம ஜயந்த

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்து அமைச்சுக்களை பங்கிடுவது ஜதார்த்தத்திற்கு முரணானதும் நடைமுறைக்கு சாத்தியமற்றதுமாகும். அவ்வாறு ஓர் நிலைதோன்றினால் ஐ.ம.சு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதிநிதி முதலமைச்சராவதற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் வாங்கவேண்டியநிலை தோன்றும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.


அவ்வாறு ஓர் நிலைதோன்றினால் ஐ.ம.சு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதிநிதி முதலமைச்சராவதற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் வாங்கவேண்டியநிலை தோன்றும் என ஐ.ம.சு கூட்டமைப்பின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இன்று 24.02.2015ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் உள்ளிட்ட தமிழ் மக்கள் வடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்ட குழுவுடனான விஷேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணசபையின் யாரை அமைச்சராக நியமிப்பது எவ்வாறு ஆட்சி நடத்துவது என்பது தொடர்பாக தீர்மானிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புயே, மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இணைந்தே கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைந்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதி முதலமைச்சராவதற்கு ஐ.ம.சு.கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியக் கடதாசி மூலம் ஆதரவு தெரிவித்தோம்.

அதைவிடுத்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்து அமைச்சுக்களை பங்கிடுவது ஜதார்த்தத்திற்கு முரணானதும் நடைமுறைக்கு சாத்தியமற்றதுமாகும் என்று அவர் தெரிவித்தாகவும் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளதாகவும் இரண்டு அமைச்சும் ஓர் பிரதித் தவிசாளரும் த.தே.கூட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளிவரும் நிலையில் சுசில் பிரேம ஜயந்தவின் கருத்து ஐ.ம.சுதந்திரக் கூட்டமைப்பே தீர்மானம் மேற்கொள்ளும் என ஆணித்தரமாக குறிப்பிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.