கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டுவருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில் உள்ள சில உறுப்பினர்களின் ஆதரவினைக்கொண்டு இவ்வாறு ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.