மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கு கல்வி உயர் விருது கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் அதிசிறந்த செயல்பாடுகள் தொடர்பான பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கல்வியின் பண்பு சார் தரம் மேம்படுத்தப்பட்டு பாடசாலை மட்டத்தில் செயற்பாடுகளை இனங்கண்டு அவ்வியூகம் செயற்பாடுகளில் அதிசிறந்த செயல்பாடுகளுக்கான விருதுகள் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட இரு பாடசாலைகளுக்கு கடந்த 30 .01.2015 அன்று கல்வி அமைச்சினால் விருதுகள் வழங்கப்பட்டது .
இவ்விருதுகளுக்கு தெரிவான பாடசாலைகளாக மட்டக்களப்பு புனித தெரேசா மகளிர் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம் அதிசிறந்த செயற்பாடுகளுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.