மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று காலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையாக அரச திணைக்களங்களிலேயே சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டுவந்த நிலையில் இம்முறை பொது அமைப்பு ஒன்று திறந்தவெளியில் இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினை சிறப்பாக அனுஸ்டித்தது.
மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையினால் மட்டக்களப்பு விபுலானந்தா பூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சி.புண்ணியமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாவட்ட புத்திஜீவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.