மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் டெங்கு தாக்குக்கு உள்ளானோர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் அப்பகுதியில் புகை அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இருதயபுரம் கிழக்கு பகுதியில் இந்த வாரம் நான்கு டெங்கு தாக்குக்கு உள்ளானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இருதயபுரம் பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ஜேசுராஜா தெரிவித்தார்.
இதனையடுத்து இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் இந்த புகையடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மழை பெய்துவருவதன் காரணமாக நுளம்பு பெருக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளில் இந்த புகை அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருதயபுரம் கிழக்கு பகுதியில் இந்த வாரம் நான்கு டெங்கு தாக்குக்கு உள்ளானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இருதயபுரம் பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ஜேசுராஜா தெரிவித்தார்.
இதனையடுத்து இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் இந்த புகையடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மழை பெய்துவருவதன் காரணமாக நுளம்பு பெருக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளில் இந்த புகை அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.