காத்தான்குடி நகரசபையில் எதிர்கட்சி உறுப்பினராகக் கடமையாற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதி எஸ்.எச்.பிர்தௌஸ் அவர்களால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகரசபையினால் அறவிடப்படும் ஆதன வரி தொடர்பில் இடம்பெற்றுள்ள நிதி நிர்வாக மோசடி தொடர்பிலேயே மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகரசபையானது தமது நிர்வாக எல்லையில் வசிக்கும் வரி இறுப்பாளர்கள் கடந்த 31.01.2015ம் திகதிக்கு முன்பாக தமது ஆதன வரியினை கட்டி முடிக்கவேண்டும் என்றும் அவ்வாறு கட்டப்படும் பட்சத்தில் 10மூ கழிவு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு பெருந்தொகையான வரி இறுப்பாளர்கள் தமது ஆதனங்களுக்கான வரியினை கடந்த 30.01.2015ம் திகதி காத்தான்குடி நகரசபைக்குச் செலுத்தி இருந்தார்கள். இருப்பினும் இந்தக் கொடுப்பனவுகளுக்கான பற்றுச் சீட்டினை வழங்கும்போது அவற்றில் பெப்ரவரி 2ம் திகதி என திகதியிடப்பட்ட மோசடி ஒன்று பரவலாக இடம்பெற்றது. இது தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கவனத்திற்கு நேற்றுக் கொண்டுவரப்பட்டிருந்தது.
அத்தோடு இந்த மோசடியினை நிரூபிக்கும் பற்றுச் சீட்டின் பிரதிகளையும் Nகுபுபுயின் நகரசபைப் பிரதிநிதிகளிடம் கையளித்திருந்தனர். இது தொடர்பான செய்தியினை பி.எம்.எம்.ஜி.யின் உத்தியோகபூர்வ ஊடகமும் வெளியிட்டிருந்தது.
பொதுமக்களின் இந்த முறைப்பாடு மற்றும் அவர்களால் வழங்கப்பட்ட இந்த ஆதாரங்கள் என்பனவற்றினைப் பரிசீலித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி பிரதேச உயர் மட்டக் குழு இது தொடர்பில் உடனடியாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என நேற்றைய தினம் கூடிய கூட்டத்தில் தீர்மானித்தது.
இதன் அடிப்படையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நகரசபைப் பிரதிநிதிகளினால் இன்று காலை மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிசார் தற்போது ஆரம்பித்துள்ளனர்.