மட்டக்களப்பு கல்வி வலய நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் ,சிற்றூழியர்,இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்கள் ஆகியோரின் சேவை நலன் பாராட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் 02.12.2014 காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கடமைபுரியும் அதிகாரிகளும் ,ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் இடமாற்றம் பெற்று சென்ற அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டதுடன் அனைவரும் கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகள் சேவை காலத்தில் ஆற்றிய சேவைகள் தொடர்பாகவும் இந்நிகழ்விலே பாராட்டு பெற்றமை சிறப்பு அம்சமாகும்.
ஒருவர் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும் எனும் தொனியில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.