தேசிய சமாதான செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இன்று காலை தேசிய சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கலாநிதி ரி.ஜயசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் தேசிய சமாதான செயலகத்தின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா,கிழக்கு மாகாண இணைப்பாளர் தயாபாரன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிக்சல் ஜெ.கிஸசன் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவப்படும் அமைப்புகளின் உறுப்பினர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,மும்மதங்களின் மதத்தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது சமூகங்களிடையே சகவாழ்வினையும் நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்பும் வகையிலான கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தின் கற்றபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமாதானத்தினை கட்டியெழுப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மதங்களிடையே ஏற்படும் கசப்புணர்வுகளை இல்லாமல் செய்து ஒன்றுபட்ட மக்களாக வாழ்வதற்கான சமூக மாற்றம் குறித்தான கருத்துகளும் இங்கு பரிமாறப்பட்டன.