லிட்டில் பட்ஸ் பாடசாலையின் 2014ம் ஆண்டிற்குரிய சான்றிதழ் வழங்கும் வைபவமும் கலைநிகழ்வும்

(த.மயூரன்)

மாணவர்களை நாளைய உலகிற்கு சிறந்த பிரஜையாக உருவாக்குவதற்கு முதற்படியாக அமைவதே ஆரம்பநிலை கற்றல் செயற்பாடு ஆகும்.


நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கலை அரங்கத்தில் லிட்டில் பட்ஸ் மொன்டிசூரி பாடசாலையின் 2014 ஆம் ஆண்டில் தங்களது ஆரம்ப நிலைக் கல்வியை நிறைவுசெய்து 2015 ஆம்வருடம் முதலாம் தரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களை சான்றிதழ் மற்றும் பரிசில்களை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் பணிப்பாளர் முகுந்தன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் கலந்துகொண்டதுடன் சிறப்புவிருந்தினர்களாக எரீடோ தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் நானாசல செயற்திட்டத்தின் வடக்குகிழக்கு பிராந்திய இணைப்பாளருமாகிய மயூரன்,லிட்டில் பட்ஸ் பாடசாலையின் தலைவர் மு.சிவசண்முகராஜா, நிலஅளவைத் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளரும் லிட்டில் பட்ஸ் பாடசாலையின் ஆலோசகருமான ஏ.சிவரஞ்ஜன் மற்றும் லிட்டில் பட்ஸ் பாடசாலையின் செயலாளரும் செங்கலடிமத்தியகல்லூரியின் ஆசிரியையுமான திருமதி.மு.சிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் குளோபல் இன்டச~னல் மொன்டிசூரி பாடசாலையின் இயக்குனர் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இவ்வருடம் பாடசாலையை நிறைவுசெய்த மாணவர்களின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்களினால் நினைவுச் சின்னம் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.