40வது தேசிய விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு கபடி அணி தங்கம் வென்று சாதனை-கூடைப்பந்தாட்ட அணி வெண்கலம் பெற்றது

கொழும்பில் நடைபெற்றுவரும் இலங்கையின் 40வது தேசிய விளையாட்டு விழாவில் கபடி அணி தங்கப்பதக்கத்தினையும் கூடைப்பந்தாட்ட அணி வெண்கலப்பதக்கத்தினையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


இன்று கொழும்பின் விளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கில் நடைபெற்ற கபடிப்போட்டியிலும் ஹென்றி பேதிரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப்போட்டியிலும் இந்த சாதனையினை படைத்துள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் பூபாலராஜா தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சினால் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டு.நியுஸ் இணையத்தளம் தனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.