
இதன்போது 46 பவுண் தங்கநகைகள், ஒரு மடிக்கணினி, 2 கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மேலும் பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
நேற்றையதினம் (15) 6.45 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பிவந்தபோது வீட்டுக்கூரை பிய்க்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த வீட்டு உரிமையாளர் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.