கல்குடா தொகுதி தமிழரசுக்கட்சி மீள் புனரமைப்பு கூட்டம்

இலங்கை தமிழரசு கட்சியின் கல்குடா தொகுதிக்கான இவ’வருடத்திற்கான புதிய நிர்வாகக் குழ உறுப்பினர்களை  தெரிவு செய்வதற்கான கூட்டம் சனிக்கிழமை  (30) மாலை வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் தமிழரசு கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது.


இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா. பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ம.நடராசா, கி.துரைராஜசிங்கம், இளைஞர் அமைப்பு தலைவர் கி.சேயோன் ஆகியோர்களுடன் பொதுமக்களும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு  நடப்பு ஆண்டிற்கான புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்தனர்.

 இலங்கை தமிழரசு கட்சியின் கல்குடா தொகுதி உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மீண்டும் தலைவராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம்,செயலாளராக க.நல்லரெட்ணம்,பொருளாளராக ப.சிவனேசன், உப தலைவர் க.சௌந்தராஜன்,உபசெயலாளர் மு.பொன்மொழி ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் மேலும் செயற்குழு உறுப்பினர்களாக கலாபுஷணம் க.செல்வநாயகம் ந.சிவனடியான்,எ.கேசவமேனன்,கி.சேயோன்,ப.நவதீபன்,க.கமலநேசன்,த.சந்திரகாஷன்,ஆ.பாஸ்கரன் ஆகியோர்கள் சபையோர்களினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.