அமைச்சர் வாசுதேவ நாணயக்காரரின் சிந்தனைக்கு அமைவாக தேசிய மொழி பயிற்சி திட்ட பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஏறத் ஆலோசனைக்குகு அமைவாக தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியும் ,சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கும் முறைமையினை தேசிய மொழி பயிற்சி திட்டம் மாவட்ட ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகான முகாமைத்துவ அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் இணைந்து மாவட்ட உள்ளூராட்சி மன்ற அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலக மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு சிங்கள மொழி தொடர்பான பயிற்சி நெறி 12 நாட்கள் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இப் பயிற்சியினை முடித்துக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகான சபை ஆளணி மற்றும் பயிற்சி பிரிவு பொறுப்பு பிரதி பிரதம செயலாளர் திருமதி ஜே .முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் .கே .சித்திரவேல் , தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிப்பாளர் கோபிநாத் ,இப் பயிற்சி நெறியின் வழங்கிய வளவாலர்களான எஸ். அல்பட் ,எம் .டப்ளியு .பியங்கிகா ,எ கே .மகேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகம் மற்றும் திணைக்கள அதிகாரிகள் ,வளவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் . இப்பயிற்சிக்கு மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இருந்து 72 அரச அதிகாரிகள் பயிற்சியில் கலந்துகொண்டனர் .
இப் பயிற்சியின் இறுதி நாளான இன்று காலை நிகழ்வுகளும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .