மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் தெரிவு செய்யப்பட்ட வர்த்தமானி வெளியீடு!!


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் பதவிகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இதன் போது சபையின் தவிசாளர் பதவிக்காக தமிழரசு கட்சியின் மண்டூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விமலநாதன்- மதிமேனன், தவிசாளராக தெரிவு செய்யப்பட்டன.

பாலையடிவட்டாரத்தில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்கராசா- கஜசீலன் துணை தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டு நேற்று(31-05-2025)ஆம் திகதி இரவு வர்த்தமானி வெளியீடப்பட்டன.

2025 ஆம் ஆண்டு போரதீவுப்பற்று பிரதேசசபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சியினர் 50வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளமையினால் போரதீவுப்பற்று பிரதேசசபையில் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என தவிசாளர்,துணை தவிசாளர் தெரிவு செய்யப்பட்டு நேற்று இரவு வர்த்தமானி வெளியீடப்பட்டன.

இதில் தேர்வான உறுப்பினர்களுக்கான உறுப்புரிமை வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் அதாவது ஜூன் மாதம் 02 ந் திகதி முதல் செயற்படும் வண்ணம் நடைமுறைக்கு வருகின்றது.

தமிழரசுக்கட்சிக்கு 8ஆசனங்களும்,கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கு 5ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 03ஆசனங்களும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.