இந்து சமய விருத்தி சங்கத்தின் மண்டூர் முருகன் திருத்தல பாத யாத்திரை ஆலயத்தினை வந்தடைந்தது

(தவக்குமார்)

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.



மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் இயற்கை அழகு செறிந்த மண்டூர் கிராமம் அமைந்துள்ளது.

தில்லை மரங்கள் அடர்நத காட்டில் இளந்   தென்றல் மெய்லென வீசும் அமைதியான சூழலிலே தானா அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக வந்துதித்த ஒளி வீசும் வேலாயுதமாகவும் முருகப்பெருமானார் சூரபத்மனை சங்கரித்த வேலாயுதத்தில் இருந்து பிறந்த மூன்று ஒளிப்பிளம்புகளில் ஒன்று உகந்த மலை இலும் இன்னென்று திருக்கோவில் வெள்ளை நாவல் மரமொன்றிலும் மற்றையது மண்டூரில் தில்லை மரத்திலும் வேல்களாக உதித்து காட்சி கொடுத்தன்.என்பது கர்ண பரம்பரையின் ஜதீகக் கதை கூறுகின்றது.

இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மண்டூர் பதி திருத்தல பாத யாத்திரை 600ற்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் அதாவதுஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரைதிவு கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகின

மனிதனை பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனை தெய்வமாகவும் மாற்றுவது தான் இந்து தர்மம். இந்தவகையில் மரவுகள் சம்பிரதாயங்கள் பண்பாடுகள் கலாச்சார விழுமியங்களை பேணும் முகமாக இந்த பாதயாத்திரையின் நோக்கமாக அமைந்தது.

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பி.ப. 2.30 மணியளவில் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தை இந்த யாத்திரியர்கள் வந்தடைந்தனர்.

பின்னர் முருகப்பெருமானை தரிசித்த பின்னர் அனைவராலும் பஜனை பாடல்களை பாடி மண்டூர் பதி திருத்தல யாத்திரையினை நிறைவு செய்தனர்.

இந்த யாத்திரையில் காரைதீவு கல்முனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை நற்பட்டிமுனை சேனைக் குடியிருப்பு திராய்கேணி அட்டப்பள்ளம் நிந்தவ+ர் போன்ற கிராம அடியார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.

இப்பாதை யாத்திரைக்கு இந்து சமய விருத்தி சங்க தலைவரும் அதிபருமான எஸ்.மணிமாறன் மற்றும் செயலாளர் கே.ஜெயராஜி  ஆகியோர் தலைமை தாங்கினர்.