சரி பிழைகளை ஆராயும் வல்லமை சர்வதேசத்திற்கு இல்;லை-அருண் தம்பிமுத்து

எமது நாட்டில் இடம்பெற்ற சரி பிழைகளை ஆராயும் வல்லமை சர்வதேசத்திற்கு இல்;லை 35 வரடங்களாக எமது நாட்டில் இடம்பெற்றவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்த சர்வதேசம் இன்று வந்து மட்டும் என்ன செய்யப் போகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதி இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது காரியாலயத்தில் திங்கள் செவ்வாய்க் கிழமைகளில் மக்கள் நேரடியாக என்னை சந்திக்கலாம் இது மட்டுமல்லாது புதன் வியாழக் கிழமைகளிலும் மக்கள் எனது காரியாலயத்திற்கு வரமுடியும் எனது அமைப்பாளர்களுடன் சந்திக்க முடியும். வெள்ளி சனி தினங்களில் எமது கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இடம்பெறும். எமது சமுகத்தின் கல்வித் தரத்தினை முன்னேற்றுவதற்கு நான் பல செயற்திட்டங்களை மேற்கொண்டள்ளேன் அது மட்டுமல்லாது இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி மக்களின் வாழ்வாதாரப்பிரச்சனைகள் தொடர்பிலும் எனது எதிர்கால நடவடிக்கைகள் இடம்பெற இருக்கின்றது.

நான் சலுகைகளுக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. நான் அரசியலுக்கு வந்த காரணம் அரசியலே. என்னை சந்திக்க வரும் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளுடன் என்னைச் சந்திக்க வருகின்றனர் அவர்கள் கூறும் அனைத்தையும் என்னால் செய்து கொடக்க முடியாது ஆனால் என்னால் முடிந்தவரை அவர்கள் கூறுகின்றதில் சிலவற்றை செய்து கொடுத்திருக்கின்றேன். எதிர்க்கட்சிகளில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளை விட ஆளும் தரப்பில் இருப்பவர்களால் மக்களுக்கு அதிகம் செய்து கொடுக்க முடியும் அதை நான் ஒருபோதும் மறுப்பதில்லை.

ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அரசியல் சலுகைகளுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் என பலர் மத்தியில் அபிப்பிராயம் இருக்கின்றது. இந்;த அபிப்பிராயத்தினை மாற்றம் செய்ய வேண்டும். அரசியலுக்காக அரசியல் கட்சிகளில் சேர வேண்டும். இதுவரை காலமும் நான் கட்சியில் இருந்து ஒரு ரூபாய் கூட உழைத்தது இல்லை எனது அரசியல் எனது சொத்துக்களின் மூலமாகவே இடம்பெறுகின்றது.

தமிழ் தேசியம் பற்றி எனக்கு பல உடன்பாடான கருத்துக்களும் இருக்கின்றன முரண்பாடான கருத்துக்களும் இருக்கின்றன. என்னை அரசியலுக்கு நுழைத்தமைக்கு பின்னனியான எனது தந்தையின் தாயின் அரசியல் இருக்கலாம் அதை வைத்தே என்னை ஜனாதிபதி அவர்கள் அரசியலுக்குள் இழுத்திருக்கலாம் ஆனால் நான் அதனை வைத்துக் கொண்டு அரசியலுக்குள் வரவில்லை.

நான் மற்றவரை ஏளனம் செய்வதற்கோ விமர்சிப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை ஆனால் சில மாற்றுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு எனக்கு உரிமை இருக்கின்றது.

இந்த 30 வருடங்களின் பின் தமிழ் மக்கள் ஒரு திசை தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இந்நிலைமையினை அரசியலில் இருப்பவர்கள் நன்கு பரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் செயற்பட வேண்டும்.
தற்போது எமது ஸ்ரீலங்கதா சுதந்திரக் கட்சி பல மாற்றங்களை உள்வாங்கியுள்ளது பல தமிழ் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டும் தமி;ழ் மொழியிலான செயற்பாடுகளும் அதிகரித்து காணப்படுகின்றது.

உண்மையில் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் அது அனைத்து சமுகத்தினையும் இணைத்துத்தான் பெறமுடியும் ஒரு சமுகத்தினை தவிர்த்து எதுவித மாற்றத்தினையும் மேற்கொள்ள முடியாது. அத்துடன் தேசிய அரசி;யல் கட்சிகளில் தமி;ழர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் அப்போதுதான் தேசிய கொள்கைகளில் தமிழர்களின் குரல்களும் எழுப்பப்படும்.

எமது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தமட்டில் ஒரு தமிழர் கூட அமைச்சராக இல்லை அவ்வாறு இருந்திருந்தால் அண்மையில் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் விவகாரம் தொடர்பில் அழுத்தம் கொடுத்து அப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியம் அவ்வாறு ஒரு செயற்பாடு மேற்கொள்வதால் முஸ்லீம் மக்களுக்கு எந்தவித அபாயமும் இல்லை ஒரு அமைச்சர் எமக்க இருந்திருந்தால் அரசிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அதற்கான தீர்வினைப் பெற்றிருக்க முடியும்.

ஜனநாயக மரபுகள் எமது மத்தியில் இல்லாமல் போனமையால் தான் தமிழர்களின் நிலைமை இன்று இவ்வாறு இருக்கின்றது. எமது மக்கள் வெறுமனே ஆட்டு மந்தைகளாகவே கையாளப்பட்டிருக்கின்றார்கள். எமது தமிழ் சமுகம் கடந்த கால யுத்தத்தில் தியாகிகள், துரோகிகள் என்ற பெயர்களில் பல புத்திஜீவிகள் பல தலைமைகளை இழந்திருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திற்கு கடந்த 2009ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டு வரை சுமார் 40000 கோடி ரூபாய்கள் அபிவிருத்திற்கென மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் எமது வளங்கள் பிரயோசனமற்று மங்கிப் போனமைக்கும் கிழக்கு மாகாணத்திற்கு தொழிற்சாலைகள் வராதமைகை;கும் காரணம் முன்பு அரசுடன் இணைந்திருந்த எமது மாவட்ட அரசியல்வாதிகள்.

இலங்கையில் தற்போது 85 வீதத்திற்கு மேல் காகிதம் இறக்குமதி செய்யப்படுகின்றது ஆனால் எமது மாவட்டத்தில் இருக்கும் காகித தொழிற்சாலை மூடப்பட்டிருக்கின்றது அரசினால் சலுகைகள் பெறப்படுகின்ற போதிலும் அவை ஒழுங்கான முறையில் செயற்படுத்தப்படுகின்றமை கேள்விக்குறியாக இருக்கின்றது.

அத்துடன் எமது மாவட்டத்தில் இருந்து 80 வீதத்திற்கும் அதிகமான நெற்கள் ஏனைய மாவட்ட தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அரியாக்கப்படுகின்றது இவை அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட வேண்டும் அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளை எமது மாகாணத்தில் ஒரு தமிழ் முதலமைச்சர் இருக்கும் போதே மேற்கொண்டிருக்கலாம் ஆனால் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தவறிவிட்டார் ஆனால் அதற்கு அவரில் மாத்திரம் நான் குற்றம் சுமத்தமவில்லை. எனவே எமது தமிழர்களின் பொருளாதாரங்கள் இவ்வாறு பின்தள்ளப்பட்ட நிலையில் இருக்கின்றது இவற்றில் ஒரு மாற்றத்தினைக் கொண்டுவர வேண்டும்.

தமிழ் தேசியத்தினை மாத்திரம் நம்பி தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை சரியான முறையில் காத்துக் கொள்ள முடியாது. தமிழ் தேசியக் கொள்கைகளில் உள்ள முரணான கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்களுடனும் பலர் இருக்கின்றார்கள் அவர்களுக்கு என்று ஒரு புகலிடம் தேவை அதனை ஏற்படுத்தி கொடுப்பேன்.

துற்போது சர்வதேச விசாரணை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பரிக்கின்றனர். இது தமிழ் மக்கள் மத்தில் ஒரு பிரிவினையும் மக்கள் மத்தியில் ஒரு நிம்மதியற்ற நிலைமையினையுமே தோற்றுவிக்கும்.

போர் முடிந்து முன்னாள் போராளிகள் என்ற ரிதியில் அனைத்தையும் மறந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளை மீண்டும் ஒரு கோரகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஆயத்தமாகவே இது அமைகின்றது. கடந்த 30 வரட காலமாக நடந்தவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்த சர்வதேச சமுகம் இன்று மட்டும் சர்வதேச விசாரணை என்று சொல்லி வந்து என்ன செய்யப் போகின்றது. எமது நதாட்டின் நிலைமைகள் குறித்து சரி பிழை கூறும் அருகதையே சர்வதேசத்திற்கு கிடையாது.