ஆரையம்பதி இளைஞர்களால் ஆரையம்பதியில் முதன் முறையாக உருவாக்கப்பட்டு நடித்து வெளியிடப்பட்ட குறுந்திரைப்படம் "தடுமாற்றம்" .இத்திரைப்படம் வெளியிட்டுவைக்கப்பட்டது.
ஆற்றல் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குறுந்திரைப்படம் ஆரையம்பதியின் முதலாவது குறுந்திரைப்படம் ஆகும்.
இதன் வெளியீட்டு நிகழ்வு ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஆற்றல் பேரவையின் தலைவருமான பூ.பிரசாந்தன்" தலைமையில் வெகு விமர்சையாக வெளியீடப்பட்டது.
இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழ்பெற்ற கலைஞரும் எழுத்தாளருமான மு.கணபதிப்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வயோதிபர் தொழிசெய்துகொண்டுசெல்லும் பணம் வீதியில் தவறவிடப்பட இதனை கண்ணுற்ற இளைஞர்கள் சிலர் அதனைகொண்டுசெல்வதும் அதனால் ஏற்படும் சமூக தாக்கங்களை சித்தரிப்பவையாக "தடுமாற்றம்"உருவாக்கப்பட்டுள்ளது.