(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று மாலை 05.30 மணிக்கு ஆரம்பமானது .
இந்;த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர். மஞ்சல் நீராடிவந்து தீக்குளியில் அம்பாள் இறங்கியதும் அடியார்கள் தீமிதிப்பு சிறப்பாக நடைபெற்றது.
22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு ஆலய திருக்கதவு திறக்கப்பட்டது .25 ஆம் திகதி புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டப்பட்டு ,இன்று மாலை இடம்பெற்ற ஆலய தீ மிதிப்பு நிகழ்வுடன் ஆலய வருடாந்த நிகழ்வுகள் நிறைபெற்றது.