மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலய ஆசிரியர் இடமாற்ற சபையினால் தீர்மானிக்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கல்குடா கல்வி வலயத்தின் ஆசிரியர் இடமாற்ற சபையின் தீர்மானத்திற்கு முரணாக சில ஆசிரிய இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் பொ.உதயரூபன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் இடமாற்ற சபையின் தீர்மானத்துடன் வெளிப்பபடைத்தன்மையுடன் நிறைவேற்றப்பட்ட பின் தூரநோக்கற்ற அரசியல் தலையீட்டின் காரணமாக சில ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கல்குடா கல்வி வலயத்தில் அநை;துள்ள பிரபல 1ஏபி பாடசலைகளில் ஒன்றான செங்கலடி மத்திய கல்லூரியின் ஆசிரியர் சேவையைச் சேர்ந்த பிரதிஅதிபரின் இடமாற்றமும் சில ஆசிரியர்களின் இடமாற்றங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை இடமாற்ற சபையின் தீர்மானத்திற்கு முரணானதாகும்.
குறிப்பிட்ட பிரதி அதிபர்; நீண்ட காலமாக நேரசூசியின்றியும், கஷ்டப் பிரதேசங்களில் சேவையைப் ப+ர்த்தி செய்யாதவராக இருப்பதோடு 8 வருட பூர்த்தியை நிறைவேற்றிய பல ஆசிரியர்கள் தேசிய இடமாற்றக் கொள்கைக்குட்பட்டு இக் கல்லூரியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரிக்கு 1998ஃ23 இலக்கமிடப்பட்ட கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி அதிபர், பிரதிஅதிபர் ஆகியோர் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் மாகாணக் கல்விச் செயலாளர் நியமிப்பினை மேற்கொள்ள வேண்டும் என எமது சங்கம் வலியுறுத்துகிறது.
மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பைக் கொண்டுள்ள ஏனைய ஆசிரியர்களின் சமத்துவக் கோட்பாட்டை மீறுகின்ற சமத்துவமின்மையினை மேலாக கருத்தில்கொண்டு உண்மையிலேயே நியாயமற்றதும், ஒருதலைப்பட்சமானதுமான தீர்மானங்களை இரத்துச் செய்தல் வேண்டும்.
கல்குடா கல்வி வலயத்தில் அமைந்துள்ள மூன்று 1ஏபி பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை சங்கம் மேலான கரிசனை கொண்டிருப்பதோடு அவசியமற்ற அரசியல் தலையீடுகளின்றி இப் பாடசாலைகள் சுயாதீனமாக இயங்குவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் உறுதி செய்தல் வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.