பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு புலம்பெயர் உறவுகளால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் புலம்பெயர் உறவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

இவ் வேலைத்திட்டத்தின்கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (EDS) இடம்பெற்றது. இதன்போது 80 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபைத் தலைவர் வேல்வேந்தன், களுதாவளை ஶ்ரீ முருகன் ஆலய பரிபாலனசபைத் தலைவர் ஞா.யோகநாதன் மற்றும் களுதாவளை கல்வி அபிவிருத்திச் சங்க நிர்வாகிகளும் பெற்றொர்களும் கலந்துகொண்டனர்.