கதிரவெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பகுதியில் நேற்று ஞாயற்றுக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கதிரவெளி,புதூர் பகுதியில் உள்ள வீட்டிலேயே இந்த மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கா.பொ.த.சாதாரண தரம் பரீட்சைக்கு தோற்றிய எஸ்.நிரோசன் என்ற மாணவனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.