வாகரையில் குடும்பநல அறிக்கை தயாரித்தல் சம்பந்தமாக பரீட்சிக்கும் நிகழ்வு

சுபீட்சம் மிகு கிராமத்தை உருவாக்குதல் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குடும்பநல அறிக்கை தயாரித்தல் சம்பந்தமாக பரீட்சிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காலை வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெறவுள்ளது.

வாகரை பிரதேச செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த குடும்பநல அறிக்கை தயாரித்தல் சம்பந்தமாக பரீட்சிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாங்கேணி குடும்பநல சுகாதார நிலையத்தில் நடைபெறும்.

வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒத்துழைப்புடனும், உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையுடனும் இக் குடும்பநல அறிக்கை தயாரித்தல் சம்பந்தமாக பரீட்சித்தல் நடைபெவுள்ளது.