மட்டு வாவி மீனவர்களை அச்சுறுத்திய முதலை பிடிக்கப்பட்டு மீண்டும் வாவியில் விடுவிப்பு –மீனவர்கள் கவலை

(தனு)

கடந்த சில மாதங்களாக மட்டு வாவி மீனவர்களை அச்சுறுத்தி வந்த 15 அடி நீளமான ஆண் முதலையொன்று இன்று மீனவர்களின் வலையில் மாட்டிக்கொண்டது.

வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மீனவர்களின் முயற்சியினால் வலையில் சிக்கியிருந்த முதலை கரைக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை இப்பாரிய முதலையை தங்களால் உயிரச்சம் காரணமாக கட்டுப்படுத்த முடியாததனால் மீண்டும் அதனைக் கொல்வதற்கு அதிகாரம் இல்லையெனத் தெரிவித்து வாவியினில் விடுவித்தனர் மீனவர்கள் மிகவும் மன்றாடிக் கேட்டும் அதற்கு வன ஜீவராசி அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.

இதனால் மட்டு மீனவர்கள் மாவட்ட அரசாங்க அதிகாரிகளின் அசமந்தப் போக்கினை இட்டு தங்களுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலால் கவலையடைந்துள்ளனர் இவ்வாறான சம்பவங்கள் தங்களுக்கு சந்தேகத்தை
உண்டுபண்ணுவதாக மீனவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை இவ்வாறான சம்பவமொன்று காத்தான்குடியில் இடம்பெற்றபோது அந்த முதலை பிடிக்கப்பட்டு அதிகாரிகளினால் அம்பாறைக்கு கொண்டுசெல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.