மட்டக்களப்பு கல்வி வலயப் பாடசாலை மாணவர்களினால் சித்திரக் கண்காட்சி இன்று புனித திரேசா பெண்கள் பாடசாலையில் சித்திரக் கல்வி வலய, சித்திர பாட சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் சி . ரவீந்திரன் தலைமையில் ஆரம்பமானது.
இக் கண்காட்சியானது பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் குருகுல சிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் அனுசரனையுடன் இந்த கண்காட்சி நடத்தப்பட்டுவருகின்றது.
இச் சித்திரக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களும் , ஆசிரியர்களும் வருகை தந்திருந்தனர்.
இதன்போது வைக்கப்பட்டுருந்த அனைத்து சித்திரங்களும் மற்றும் கைவினை சித்திரங்களும் மாணவர்களின் கை வண்ணத்தால் , உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .










