மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு இன்று 24.11.2013 ஞாயிற்று கிழமை காலை 10.00மணியளவில் கல்லூரி மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது .
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வெள்ளிவிழா நாயகன் அருட்பணி ஐ . ஜோசப் அவர்களும், கல்லூரி அதிபர் அருட்சகோதரி எம் .எலிசபெத் , அருட்சகோதரி எம் .குளோறேண்ஸ் , மற்றும் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , கல்லூரியின் பழைய மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந் நிகழ்வானது மங்கள விளக்கேற்றப்பட்டு திருப்பலியுடன் ஆரம்பமானது .
இத் திருப்பலியை அருட்பணி ஐ . ஜோசப் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது .
இத் திருப்பலியின் பின் பழைய மாணவிகளினால் தயாரிக்கப்பட்ட நாடகம் , நடனங்கள் பாடல்கள் என பல சுவாரசியமான கலை நிகழ்வுகள் இடம்பெற்றன .இறுதி நிகழ்வாக மதிய விருந்துபச்சாரத்துடன் பழைய மாணவிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு நிறைவுபெற்றது .