வர்த்தகப் பண்ணை அமைத்தல் செயற்திட்ட விவசாயிகளுக்கான நேர்முகப்பரீட்சைகள்

விவசாய அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள வர்த்தகப் பண்ணை அமைத்தல் செயற்திட்ட விவசாயிகளுக்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 27 மற்றும் 29ஆம்திகதி களில் நடைபெறவுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் நடைபெறவுள்ள இவ் நேர்முகப்பரீட்சையில் இதற்கென விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பங்கு பெறலாம் என மாவட்ட விவசாயப்பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்துள்ளார்.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் வர்த்தகப் பண்ணை அமைத்தல் செயற்திட்ட விவசாயிகளுக்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெறும்.