செட்டிபாளையத்தில் இரு பஸ்கள் மோதி விபத்து –எட்டு பேர் படுகாயம்

(பிரதீஸ்)

மட்டக்களப்பு   கல்முனை   பிரதான  நெடுஞ்சாலையில்    செட்டிபாளையத்தில்    3ம்  திகதி   காலை   6.20  மணியளவில்   ,டம்பெற்ற  வீதி  விபத்தில்    8  பேர்  காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள்    செட்டிபாளையம்  பிரதேச  வைத்தியசாலை   ,மட்டக்களப்பு  போதனா  வைத்தியசாலைகளுக்கு    கொண்டு  செல்லப்பட்டனர்.

கல்முனையில்  இருந்து மட்டக்களப்பு  நோக்கிச்சென்ற   தனியார்  பஸ்வண்டியும்   மட்டக்களப்பில்  இருந்து  கல்முனை  நோக்கி வந்த  இலங்கை  போக்குவரத்து சபையின்  பஸ்வண்டியும்  வேகக்கட்டுப்பாட்டை   இழந்து  இரண்டு  வௌ;வேறு  வீடுகளுக்குள்  புகுந்தமையால்    சேதம்   ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த   ஒரு  வீடு   தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  கிழக்கு மாகாணசபை   உறுப்பினர்  கோவிந்தன்  கருணாகரன்(ஐனா)   சகோதரர்  உடையது. களுவாஞ்சிக்குடி  பொலிசார்  விசாரணைகளை  மேற்கொண்டு  வருகின்றனர்.