பிக்குவின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு. 14 பிரதேச செயலகங்களிலும் பகிஸ்கரிப்பு

மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு - பட்டிப்பளை பிரதேச செயலகம் உள்ளிட்ட 14 பிரதேச செயலகங்களிலும் இன்று பகல் 12.05க்கு வேலைப்பகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டமைக்கும், பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் தாக்கியமை, தவறான தகவல்களை வெளியிட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதே நேரம், நேற்றைய தினம் பகல் முதல் பட்டிப்பளை பிரதேச செயலகம் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.