வீரகத்திப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் -கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் வழிபாடு

மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தின் 4ஆம்நாள் திருவிழாவில், கிழக்கு மாகாணத்துக்காள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இவருடன் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

வரலாற்றுச்சிறப்புமிக்க ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 31ஆம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வருடாந்த உற்சவ கிரியைகளில் சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ த.சிவகுமாரக்குருக்கள் மேற்கொள்கிறார்.

ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தீர்ச்சோற்சவம் எதிர்வரும் 9ஆம்திகதி நடைபெறவுள்ளது.