சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய சப்புரத்திருவிழா

மட்டக்களப்பு சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

இதனை முன்னிட்டு இன்று விநாயகப்பெருமானின் வீதியுலா இடம்பெற்றது.முத்துச்சப்புரத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த சப்புர வீதியுலாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் வீதியெங்கும் பக்தர்கள் நிறைகுடங்களை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.