செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலைக்கு செட்பாளையம் கண்ணகியம்மன் ஆலயத்தினால் ஒன்றரை ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.
செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலை அபிவிருத்திசெய்யப்படவுள்ள நிலையில் தற்போதைய வைத்தியசாலையில் இடவசதியின்மை காரணமாக கண்ணகியம்மன் ஆலய பரிபாலன சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த காணி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காணி உறுதிப்பத்திரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆலய தலைவரினால் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.முகம்மது மன்சூரிடம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அமைச்சரினால் அமைச்சின் செயலாளர் அமலநாதனிடம் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது.