நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை


நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் சிலரை மீட்பதற்காக, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளன.

இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உதவி புரிவதற்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.