பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் நிலவிவரும் தென்மேற்குக் பருவப் பெயர்ச்சி காலநிலையினால் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'ஆம்பர்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (13) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை  (14) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இந்த அபாய நிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்தடுத்து வெளியிடப்படும் உத்தியோகபூர்வ வானிலை ஆலோசனைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.