விவசாயிகள்,முதலீட்டாளர்களின் மேம்பாட்டை நோக்காக கொண்டு ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் கிளை திறந்துவைப்பு

ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 6ஆவது கிளை மட்டக்களப்பில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் தலைமை விருந்தினராகப் ஹெரிட்டேஜ் குரூப் நிறுவனத்தின் கௌரவத் தலைவரும், தேசபந்து, தேசமான்ய டாக்டர் கங்கானத் குமாரசிங்க, ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி சது குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் புதிய கிளை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அதிகாரி சஞ்சீவ டி சில்வா மற்றும் மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பிராந்திய மட்டத்திலான மேம்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விவசாயம், முதலீட்டாளர்கள் மற்றும் இந்தத் துறையோடு தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பிரதான மையமாகவேஇந்த பிளான்டேஷன் துறை காணப்படுகிறது. இதன் மூலமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு நாங்கள் ஒரு பலமிக்க பங்களிப்பை வழங்கி வருகிறோம் என இங்கு தெரிவிக்கப்பட்டது.