குறித்த சம்பவமானது இன்றையதினம்(10.6.2026) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஆற்றங்கரைப் பகுதியிலிருந்து, பாதணி, மின்சூளட்டி , தண்ணீர் கொள்கலன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
