வெருகல் ஆற்றில் - முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை- வெருகல் ஆற்றிலிருந்து, உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(10.6.2026) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஆற்றங்கரைப் பகுதியிலிருந்து, பாதணி, மின்சூளட்டி , தண்ணீர் கொள்கலன்  என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.