மட்டக்களப்பில் உருவாகும் முழு நீளத்திரைப்படம்


கிழக்கு மாகாணத்திலிருந்து அண்மைக்காலமாக சினிமாக்கலைஞர்களின் பல்வேறு படைப்புகள் வெளிவரும் நிலையில் திரைப்படத்துறையில் ஒரு மருமலர்ச்சி நிலையினை ஏற்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிஷாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய முழு நீள திரைப்படத்திற்கான பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு கீரிமடு சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிறஜிதன், கதாநாயகியாக தனுஸ்கா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் மட்டக்களப்பு சினிமாவின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் பல்துறை கலைஞருமான முரளிதரன் மற்றும் மூத்த திரைப்படத்துறை தயாரிப்பாளராகவும் பல்வேறு துறைகளில் தனது திறமையினை வெளிப்படுத்திவரும் தேவ அலோசியஸ் உட்பட பலர் இதில் இணைந்துள்ளனர்.

தயாரிப்பாளர் ரோஜி தயாரிக்கும் இத்திரைப்படம், புதிய கூட்டணியுடன் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், மட்டக்களப்பு சினிமாவின் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். 

விருதுகள் வென்ற பல குறும்படங்களை இயக்கிய நம்பிக்கை தரும் இயக்குநர் கிஷாந், இயக்கும் முதல் முழு நீளத்திரைப்படமாக காணப்படுவதனால் கிழக்கு மாகாணம் மட்டுமல்ல முழு தமிழ் இரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.