பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் மட்டக்களப்பில் இருந்து புதிதாக
தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (03) திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
10 நாட்களைக் கொண்ட குறித்த பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்ப உரையினை நிகழ்தியதுடன், இவர்கள் எவ்வாறாக தமது சேவையினை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்திருந்தார்.




