சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கல்முனையிலிருந்து பொலநறுவை பக்கம் நோக்கி பயணித்த வேனும் பொலநறுவையிலிருந்து கொங்கிறீட் (3/4)Inch கல் ஏற்றி வாழைச்சேனை பக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .
வேனில் பயணித்த அனைவருமே காயங்களுக்குள்ளான நிலையில் பொதுமக்களினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் . இதில் காயம் அடைந்தோரில் இரண்டு ஆண்களும், ஐந்து பெண்களும் உள்ளடங்குகின்றனர்




