இருதய நோயாளர்களின் அதிகரிப்பு – மாற்றமடைகின்ற உணவு பழக்கங்கள்

 

நேற்றைய தினம் (31) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க  இ இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். 


 அத்தோடு இதற்கான காரணம் தற்போது மாறி வருகின்ற உணவுப்பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பன அதிகம் இவ் இருதயநோய்க்கு வழிவகுகன்கின்ற காரணமாகும் என அவர் சுட்டிகாட்டியுள்ளார். 


அத்தோடு, தினசரி 175 முதல் 200 பேர் வரை இருதய நோயாளர்களாக அடையாளங் காணப்படுவதாகவும் இருதய வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.