மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற இலங்கை சாரண சங்கத்தின் தேசிய பொங்கல் விழா


இலங்கை தேசிய சாரண சங்கத்தின் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.அனைத்து இன மக்களின் மக்களின் பங்களிப்புடனும் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த தேசிய பொங்கல் விழா நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பதில் மாவட்ட ஆணையாளர் அ.கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டீனா முரளிதரன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் பார்த்தீபன்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ரவிராஜ்,மாநகர ஆணையாளர் என்.தனஞ்சயன், இலங்கை சாரணர் சங்க தலைமையகத்தின் ஆணையாளாரும் கிழக்கு பிராந்திய சாரண ஆணையாளருமாகிய பி.சசிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழர்களின் பாரம்பரிய கலாசார இசையுடன் அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதுடன் பொங்கல் நிகழ் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து அனைத்து இனசாரணிய மாணவர்களும் கலந்துகொண்டதுடன் பொங்கல் நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர்.
இந்த பொங்கல் நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.