தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு பேச்சாளராக ஞா.சிநேசன் எம்.பி.தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் புதிய பேச்சாளராக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டார்.
10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெற்ற வேளை, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் புதிய பேச்சாளராக சிறிநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.