கிழக்கு மாகாணத்தில் அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார வழங்குவது குறித்தான கூட்டம்


அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை தயாரிப்பதற்கான மக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டல் நிகழ்வானது  (06) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவி செயலாளர் ஏ.ஆதவன், நுகர்வோர் விவகார பிரிவு மக்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு  பிரதிப் பணிப்பாளர் ரொஷான் வீரசூரிய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் காஞ்சன ஸ்ரீவர்த்தன, பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.