வீட்டிலிருந்த அலுமாரியை உடைத்து அலுமாரிலிருந்த தங்க பாதையைத் திருடி மட்டக்களப்பு நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் இரண்டு லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்த குறித்த சம்பவத்தில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
குறித்த வீட்டிலிருந்த ஏரிஎம் அட்டையை மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவம் இடம்பேற்ற சம்பவத்திற்கு இடத்துக்கு சற்று அருகிலுள்ள பூட் சிட்டி ஒன்றில் 13 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை கொள்வதை செய்து கொண்டிருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு வந்த குறுஞ்செய்தி ஊடாகவே குறித்த சம்பவத்தை அறிய முடிந்துள்ளது.
மேற்படி பல்பொருள் பூட் சிற்றியின் சிசிடிவி கமராவை பரிசோதித்த போது சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த நபரே மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்றை சேர்ந்த 21 வயதுடைய குறித்த நபர் அவரது மனைவி சகிதம் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார் .
குறித்த நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள அதே நேரம் திருடப்பட்ட நகையை நகைக்கடையில் விற்பனை செய்த மனைவியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களிடமிருந்து ஒரு தங்க மாலை மற்றும் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் பணம் ஏரிஎம் அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன .இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதமான நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.