போக்குவரத்து திணைக்களத்தில் 3 இலட்சம் ரூபா இலஞ்சம் உதவி ஆணையாளர் உட்பட மூவர் கைது


மூன்று
பஸ்களின் உரிமையை மாற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவரும் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் மற்றும் அத்திணைக்களத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரான உதவி ஆணையாளர் தன்னிடம் இருந்த இலஞ்சம் பெற்ற பணத்தை கிழித்தெறிய முயன்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.