மட்டக்களப்பு மாவட்டத்தில் 70வீதம் வாக்களிப்பு-சுமுகமாக நடைபெற்ற தேர்தல் -இந்துக்கல்லூரிக்கு கொண்டுவரப்பட்ட வாக்குபெட்டிகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 09வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் இன்றைய வாக்களிப்பில் சுமார் 70வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்;ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

இலங்கையின் 09வது ஜனாதிபதியை தெரிவுசேய்யும் தேர்தல் வாக்களிப்பு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு,பட்டிருப்பு,கல்குடா தேர்தல் தொகுதிகளில் இன்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

முட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்றைய தினம் வாக்களிப்பதற்கு 4இலட்சத்து 49ஆயிரத்து 686 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றது.இதன் கீழ் கல்குடா தொகுதியில் 134104பேரும் மட்டக்களப்பு தொகுதியில் 210293பேரும் பட்டிருப்பு தொகுதியில் 105289 பேரும் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை 07.00மணி தொடக்கம் மாலை 4.15மணி வரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்கீழ் கல்குடா தொகுதியில் 94388பேரும் மட்டக்களப்பு தொகுதியில் 145072பேரும் பட்டிருப்பு தொகுதியில் 67442பேரும் இன்றைய தினம் வாக்குகளை பதிவுசெய்துள்ளனர்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித வாக்குகளும் பதிவுசெய்யப்படாத நிலையில் 81தேர்தல் சட்ட விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள் 4.15மணியளவில் நிறைவடைந்த நிலையில் வாக்கு பெட்டிகள் பிரதான வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

முட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்திற்கு இந்த வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

வுhக்குப்பெட்டிகளை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் ஆகியோர் தலைமையில் பொறுப்பேற்கப்பட்டு வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.

இன்று மாலை 4.30மணி தொடக்கம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் தபால்மூலம் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மாலை 5.30மணி தொடக்கம் ஏனைய வாக்குப்பெட்டிகள் எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 நிலையங்களிலும் 6750 அரசாங்க ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்ததுடன் 1500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு பிரதான வாக்கு எண்ணும் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததை காணமுடிந்தது.சில இடங்களில் மந்த கதியிலேயே வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுpல இடங்களில் கட்சி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் காணப்பட்டதுடன் பெரும்பாலான இடங்களில் தேர்தல் சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வாக்களிப்பு நடைபெற்றதை காணமுடிந்தது.