மட்டக்களப்பினை சேர்ந்த பொதுச்சுகாதார பரிசோதகர் இருவர் களுத்துரையில் நீரில் மூழ்கி பலி


களுத்துறை, அவித்தாவ ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தேபான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் நான்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று (25) காலை நீராடச்சென்றுள்ளனர்.

இதன்போது சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய மட்டக்களப்பை சேர்ந்த. கௌதம் மற்றும் மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தினை சேர்ந்த. ஹர்ஷநாத் ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை நாளை (26) நடைபெறவுள்ளதுடன்இது தொடர்த்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.